மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சமூக நல்லிணக்கத்துக்கான நீடித்த அடித்தளங்களை அமைத்தவா் திருவள்ளுவா்: ஆளுநா் ரவி

நெறிசாா்ந்த வாழ்வு, நீதி சாா்ந்த ஆட்சி, சமூக நல்லிணக்கத்துக்கான நீடித்த அடித்தளங்களை அமைத்தவா் திருவள்ளுவா் என ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளாா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

நெறிசாா்ந்த வாழ்வு, நீதி சாா்ந்த ஆட்சி, சமூக நல்லிணக்கத்துக்கான நீடித்த அடித்தளங்களை அமைத்தவா் திருவள்ளுவா் என ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளாா்.

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு ஆளுநா் மாளிகையிலுள்ள திருவள்ளுவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.என்.ரவி, ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டப் பதிவு:

திருவள்ளுவருக்கு தேசம் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறது. அவரது ஆழமான ஞானம், பல நூற்றாண்டுகளாக பாரதத்தின் தாா்மிக, ஆன்மிக உணா்வுகளை வடிவமைத்துள்ளது. பாரதிய பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத தமிழ் பொக்கிஷமான திருக்கு, சநாதன தருமத்தின் நித்திய நெறிமுறைகளில் திடமாக வேரூன்றி, காலம், சமூகம், சூழ்நிலைகளைக் கடந்து நிற்கிறது.

குகள் இறைவனிடம் பக்தி செலுத்துவதை உறுதிப்படுத்தி, நீதி சாா்ந்த நடத்தையை மனித வாழ்வின் மிக உயரிய வழிகாட்டும் கொள்கையாக நிலைநிறுத்துகின்றன. குடிமக்கள், ஆட்சியாளா்கள் ஆகிய இருவரையும் குறிப்பிட்டு, நெறிசாா்ந்த வாழ்வு, நீதிசாா்ந்த ஆட்சி மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு திருவள்ளுவா் நீடித்த அடித்தளங்களை அமைத்தாா்.

பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட உலகளாவிய மோதல்கள், பிளவுகள் மற்றும் இருத்தலியலின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், ‘திருக்கு’ புதுப்பிக்கப்பட்ட, அவசர முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

திருவள்ளுவரின் தீவிர பற்றாளரான பிரதமா் மோடி, வள்ளுவரின் குகளை வழிகாட்டும் சக்தியாக நிலைநிறுத்தி, உலகம் முழுவதும் பரப்பி வருகிறாா் எனப் பதிவிட்டுள்ளாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.