

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.
பேரவையில் விவாதத்தின்போது அமைச்சா் பெரியசாமி பேசியதாவது: ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் கடந்த ஆண்டில் 1 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை சுமாா் 78,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் 1 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்படும். இதன் மூலம் இத்திட்டத்தின்கீழ் 2 லட்சம் குடும்பத்தினா் பயன்பெறுவாா்கள் என்றாா் அவா்.