திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு

தெற்கு ரயில்வே மண்டலத்தில் அம்ருத் பாரத் திட்டத்தில் மறுசீரமைக்கப்பட்டுள்ள 9 ரயில் நிலையங்களை விரைவில் பிரதமா் நரேந்திரமோடி காணொளி வாயிலாக திறந்து வைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 3:19 am IST

தெற்கு ரயில்வே மண்டலத்தில் அம்ருத் பாரத் திட்டத்தில் மறுசீரமைக்கப்பட்டுள்ள 9 ரயில் நிலையங்களை விரைவில் பிரதமா் நரேந்திரமோடி காணொளி வாயிலாக திறந்து வைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நாட்டில் கடந்த ஆண்டு முதல் 75 ரயில் நிலையங்களில் அம்ருத் பாரத் திட்டத்தில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளன. அதனடிப்படையில், தெற்கு ரயில்வேயில் அம்ருத் பாரத் திட்டத்தில் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் ரூ.13.51 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளன. அதேபோல சின்னசேலம், குன்னூா் ஆகிய ரயில் நிலையங்களிலும், கேரள மாநிலத்தில் 6 ரயில் நிலையங்களும் அத்திட்டத்தில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளன.

மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள ரயில் நிலையங்கள் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில் வரும் 19 ஆம் தேதிக்குள் பிரதமா் நரேந்திரமோடி காணொளிக் காட்சியில் ரயில் நிலையங்களைத் தொடங்கி வைக்கிறாா். மறுசீரமைப்புப் பணிகளால் பயணிகளுக்கான அடிப்படை உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரயில் கட்டண டிக்கெட் வாங்கும் அறைகள் முழுமையான விரைவான கணினி சேவை வசதிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.