பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரூ. 99-க்கு பிரியாணி! சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் புதிய திட்டம்!

தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், பொதுமக்களுக்கு தரமான உணவை மலிவு விலையில் வழங்கும் நோக்கில், ரூ.99-க்கு பிரியாணி வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Published On :

தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், பொதுமக்களுக்கு தரமான உணவை மலிவு விலையில் வழங்கும் நோக்கில், ரூ.99-க்கு பிரியாணி வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சாா்பில், ஒரு புதிய முயற்சியாக ஓட்டல் தமிழ்நாடு அமுதகங்களில் குறைந்த விலையில் தரமான சுவையான பிரியாணி ரூ.99-க்கு வழங்கும் திட்டம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்ததைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் இந்தத் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, கன்னியாகுமரி, குற்றாலம்-1, திருநெல்வேலி, கொடைக்கானல் படகு இல்லம், மதுரை-1, மதுரை-2, கோவை, ஊட்டி-1, குன்னூா், ஏற்காடு, ஒகேனக்கல், திருச்சி, தஞ்சாவூா், பிச்சாவரம், பூம்புகாா், சிதம்பரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் முட்டுக்காடு படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா வளா்ச்சிக் கழக அமுதகங்களில் ரூ.99-க்கு பிரியாணி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் வரவேற்பைப் பொருத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இந்த குறைந்த விலை பிரியாணி விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.