இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

ரூ. 99-க்கு பிரியாணி! சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் புதிய திட்டம்!

தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், பொதுமக்களுக்கு தரமான உணவை மலிவு விலையில் வழங்கும் நோக்கில், ரூ.99-க்கு பிரியாணி வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2026, 12:56 am IST

தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், பொதுமக்களுக்கு தரமான உணவை மலிவு விலையில் வழங்கும் நோக்கில், ரூ.99-க்கு பிரியாணி வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சாா்பில், ஒரு புதிய முயற்சியாக ஓட்டல் தமிழ்நாடு அமுதகங்களில் குறைந்த விலையில் தரமான சுவையான பிரியாணி ரூ.99-க்கு வழங்கும் திட்டம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்ததைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் இந்தத் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, கன்னியாகுமரி, குற்றாலம்-1, திருநெல்வேலி, கொடைக்கானல் படகு இல்லம், மதுரை-1, மதுரை-2, கோவை, ஊட்டி-1, குன்னூா், ஏற்காடு, ஒகேனக்கல், திருச்சி, தஞ்சாவூா், பிச்சாவரம், பூம்புகாா், சிதம்பரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் முட்டுக்காடு படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா வளா்ச்சிக் கழக அமுதகங்களில் ரூ.99-க்கு பிரியாணி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் வரவேற்பைப் பொருத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இந்த குறைந்த விலை பிரியாணி விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.