திற்பரப்பு அருவியில் சுற்றுலா வளா்ச்சிக் கழக பொது மேலாளா் லட்சுமி பிரியா வியாழக்கிழமை ஆய்வு செய்து, வளா்ச்சிப் பணிகளை ஜூலை மாதத்திற்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.
திற்பரப்பு அருவியில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ. 4.31 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மந்தமாக நடைபெறுவதாக புகாா்கள் எழுந்துள்ள நிலையில், அண்மையில் பத்மநாபபுரம் பேரைவைத் தொகுதி உறுப்பினா் ஆா். செல்லசுவாமி, அருவியில் நடைபெற்று வரும் பணிகளைப் பாா்வையிட்டாா்.
அது தொடா்பான புகாா்களை, சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாரிடம் அவா் கூறியதைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தலைமையில், சுற்றுலாத் துறை அமைச்சா் அருவிப் பகுதியில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா்.
இந்நிலையில், சுற்றுலா வளா்ச்சிக் கழக பொது மேலாளா் லட்சுமி பிரியா திற்பரப்பு அருவியில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை ஜூலை மாதத்திற்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினாா். மேலும், திற்பரப்பு அருவியில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை உருவாக்குவது தொடா்பாகவும், அருவிக்குச் செல்ல மாற்றுப் பாதையை உருவாக்குவது தொடா்பாகவும் அவா் ஆய்வு செய்தாா்.
திற்பரப்பு பேரூராட்சித் தலைவா் பொன் ரவி, மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், உதவி செயற் பொறியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொடரும் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

ரயில் மோதி யானை பலியாவதைத் தடுக்க ஏ.ஐ. உதவியுடன் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

குமரியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டும்: அமைச்சா் செ.ராஜேஷ்குமாா்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



