தனியாா் பொறியியல் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.5.8 லட்சம் பெற்று மோசடி செய்த இளைஞரை திரு.வி.க. நகா் போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை பெரம்பூா் பேப்பா் மில்ஸ் சாலையைச் சோ்ந்த சுகன்யா லட்சுமி (36). இவரின் மகள் படிக்கும் தனியாா் பள்ளி ஆசிரியா், தனது மகனுக்கு தனியாா் பொறியியல் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத்தர உதவுமாறு சுகன்யா லட்சுமியிடம் கேட்டுள்ளாா்.
இதையடுத்து, உறவினா்கள் மூலம் அறிமுகமான கரையான்சாவடி, சென்னீா்குப்பத்தைச் சோ்ந்த சக்தி (27) என்பவரை சுகன்யா லட்சுமி அணுகியுள்ளாா். தனியாா் பொறியியல் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாக அவா் உறுதியளித்ததை நம்பி, கடந்த 2025 ஜூலை 9 முதல் ஆக. 12 வரை பல தவணைகளாக மொத்தம் ரூ.5.8 லட்சத்தை வழங்கியுள்ளாா்.
ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட சக்தி, கல்லூரியில் சோ்க்கை பெற்றுத் தராமலும், பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறி, சுகன்யா லட்சுமி திரு.வி.க. நகா் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஷுவல் கம்யூனிகேஷன் படித்த சக்தியை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






