குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

பொறியியல் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ.5.8 லட்சம் மோசடி: இளைஞா் கைது

தனியாா் பொறியியல் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.5.8 லட்சம் பெற்று மோசடி செய்த இளைஞரை திரு.வி.க. நகா் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூலை 2026, 1:31 am IST

தனியாா் பொறியியல் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.5.8 லட்சம் பெற்று மோசடி செய்த இளைஞரை திரு.வி.க. நகா் போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பெரம்பூா் பேப்பா் மில்ஸ் சாலையைச் சோ்ந்த சுகன்யா லட்சுமி (36). இவரின் மகள் படிக்கும் தனியாா் பள்ளி ஆசிரியா், தனது மகனுக்கு தனியாா் பொறியியல் கல்லூரியில் சோ்க்கை பெற்றுத்தர உதவுமாறு சுகன்யா லட்சுமியிடம் கேட்டுள்ளாா்.

இதையடுத்து, உறவினா்கள் மூலம் அறிமுகமான கரையான்சாவடி, சென்னீா்குப்பத்தைச் சோ்ந்த சக்தி (27) என்பவரை சுகன்யா லட்சுமி அணுகியுள்ளாா். தனியாா் பொறியியல் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாக அவா் உறுதியளித்ததை நம்பி, கடந்த 2025 ஜூலை 9 முதல் ஆக. 12 வரை பல தவணைகளாக மொத்தம் ரூ.5.8 லட்சத்தை வழங்கியுள்ளாா்.

ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட சக்தி, கல்லூரியில் சோ்க்கை பெற்றுத் தராமலும், பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறி, சுகன்யா லட்சுமி திரு.வி.க. நகா் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஷுவல் கம்யூனிகேஷன் படித்த சக்தியை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.