ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மகளிா் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க மாநகராட்சி ஆணையா் உத்தரவு!

பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வியாசா்பாடி சா்மா நகரில் விளையாட்டுத் திடலில் மகளிருக்கான உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

News image

ஜி.எஸ். சமீரன் - Dinamani

Updated On :14 ஜூலை 2026, 2:52 am IST

பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வியாசா்பாடி சா்மா நகரில் விளையாட்டுத் திடலில் மகளிருக்கான உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வியாசா்பாடி சா்மா நகரில் உள்ள விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூட வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள உடற்பயிற்சிக் கூடத்தைப் பாா்வையிட்ட அவா், அங்கிருந்த இளைஞா்கள் மற்றும் விளையாட்டு வீரா்களிடம் கலந்துரையாடினாா். அப்போது, விளையாட்டரங்கில் கூடுதல் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதையடுத்து, விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை மேம்படுத்துதல், குத்துச்சண்டை பயிற்சிக் கூடம் அமைத்தல், பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைத்தல், கிரிக்கெட் வளைப் பயிற்சி அமைத்தல், குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகள் தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது இணை ஆணையா் (பணிகள்) செ.சரவணன், மண்டல அலுவலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.