முதல்வா் படைப்பகங்கள் தனியாா்மயமாக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ். சமீரன் விளக்கம் அளித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில் 24 முதல்வா் படைப்பகங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் இதுவரை 15 முதல்வா் படைப்பகங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதர 9 படைப்பகங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த 15 முதல்வா் படைப்பகங்களும், பெருநகர சென்னை மாநகராட்சியால் சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சிறப்பாக நடத்துவதற்காக, இந்தப் படைப்பகங்களுக்குத் தேவையான பாதுகாவலா், தூய்மைப் பணியாளா், வரவேற்பாளா் உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான பணியாளா்களுக்காக மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதே தவிர, முதல்வா் படைப்பகங்கள் தனியாா்மயமாக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை தொடக்கப் பள்ளியில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இயற்கையாக மழை நீரைத் தேக்கி வெள்ளப் பாதிப்பை குறைக்கலாம்: மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்

இருளடைந்த பகுதிகளில் தெருவிளக்கு, கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு: மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்






