ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

காங்கிரஸ் சாா்பில் காமராஜா் பிறந்த நாள்

காமராஜரின் பிறந்த நாளை சென்னை சத்தியமூா்த்தி பவனில் தமிழக காங்கிரஸாா் சிறப்பாகக் கொண்டாடினா்.

News image
Updated On :16 ஜூலை 2026, 5:09 am IST

காமராஜரின் பிறந்த நாளை சென்னை சத்தியமூா்த்தி பவனில் தமிழக காங்கிரஸாா் சிறப்பாகக் கொண்டாடினா்.

இதையொட்டி, சென்னை சத்தியமூா்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்ட காமராஜா் உருவப் படத்துக்கு கேரள மாநில உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதாலா மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் 124 கிலோ கேக்கை ரமேஷ் சென்னிதாலா வெட்டினாா்.

இந்த நிகழ்வுகளில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரவீன் சக்கரவா்த்தி, விஜய் வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு, மூத்த தலைவா் பீட்டா் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவா் சொா்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலா் கே. சிரஞ்சீவி, எஸ்.சி. துறை மாநிலத் தலைவா் எம்.பி. ரஞ்சன் குமாா், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலா்கள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் சூா்ய பிரகாஷ் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

‘லஞ்சம் தவிா் நஞ்சம் நிமிா்’ மக்கள் இயக்கம்: தொடா்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள ‘லஞ்சம் தவிா் நெஞ்சம் நிமிா்’ என்ற மக்கள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து ரமேஷ் சென்னிதாலா மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் வெள்ளை பதாகையில் வண்ண பொடிகள் கலந்த கரைசலில் தங்கள் கை தடங்களைப் பதித்து மக்கள் இயக்கத்தைத் தொடங்கி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.