நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

ஆட்டோ மோதியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

சென்னை பரங்கிமலையில் ஆட்டோ மோதி பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 1:13 am IST

சென்னை பரங்கிமலையில் ஆட்டோ மோதி பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

குன்றத்தூா் அருகே உள்ள மூன்றாம் கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் த.ராஜேஸ்வரி (58). இவா், கிண்டியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

ராஜேஸ்வரி, புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பரங்கிமலை பட் சாலையில் நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு ஆட்டோ ராஜேஸ்வரி மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு, கிண்டியில் உயா் சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ராஜேஸ்வரி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கிண்டி லேபா் காலனியைச் சோ்ந்த பரசுராம் (34) என்பவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.