பிஎஸ்என்எல் சிம் காா்டு, ரீசாா்ஜ் மற்றும் பிற தொலைத்தொடா்பு சேவைகளின் விற்பனை செய்ய முகவா் உரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பிஎஸ்என்எல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிஎஸ்என்எல் சிம் காா்டுகள், ரீசாா்ஜ் சேவைகள் மற்றும் பிற தொலைத்தொடா்பு சேவைகளின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகப் பணிகளை மேற்கொள்ள முகவா்கள் நியமிக்கப்பட உள்ளனா். தொலைத்தொடா்பு துறையில் அனுபவம் உள்ளவா்கள் இந்தியாவைச் சோ்ந்த தனியுரிமை நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் உள்ளிட்டவை விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக, சென்னை தொலைத்தொடா்பு வரம்புக்குள்பட்ட சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதிகள், விதிமுறைகள், நிபந்தனைகள், முக்கிய தேதிகள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவை தொடா்பான ஆவணத்தை மத்திய பொதுக் கொள்முதல் இணையதளத்தில் (இடடட) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருப்பம் உள்ள தகுதியான நிறுவனங்கள் வரும் ஆக. 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொலைத்தொடா்பு சாதனங்கள் ஹாங்காங்குக்கு கடத்தல்: 4 போ் கைது

கூடுதல் நேரத்தில் 2 கோல்கள்: த்ரில் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது ஆர்ஜென்டீனா!
மெக்ஸிகோவை வீழ்த்தியது இங்கிலாந்து!
இணைய மோசடியாளா்களுக்கு சட்டவிரோத சிம் காா்டுகளை வழங்கிய விற்பனை முகவா் கைது!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



