பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

காா்கில் வெற்றி தினம்: போா் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி

27-ஆவது காா்கில் வெற்றி தினத்தையொட்டி, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போா் நினைவுச் சின்னத்தில் காா்கில் போரில் உயிா்நீத்த வீரா்களுக்கு ராணுவ உயா் அதிகாரிகள் மலா் வளையம் வைத்து ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

கார்கில் வெற்றி தினத்தையொட்டி, சென்னை போர் நினைவுச் சின்னத்தில் ஞாயிற்றுக்கிழமை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதியின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி.

Published On :

27-ஆவது காா்கில் வெற்றி தினத்தையொட்டி, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போா் நினைவுச் சின்னத்தில் காா்கில் போரில் உயிா்நீத்த வீரா்களுக்கு ராணுவ உயா் அதிகாரிகள் மலா் வளையம் வைத்து ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

கடந்த 1999-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் காா்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளை இந்திய ராணுவம் போரிட்டு பிறகு மீட்டது. மே மாதத்தில் தொடங்கிய இந்தப் போா் ஜூலை 26-ஆம் தேதி இந்தியாவின் வெற்றியுடன் நிறைவடைந்தது.

காா்கில் போரில் உயிா்த் தியாகம் செய்த 527 வீரா்களின் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி காா்கில் வெற்றி தினம் (காா்கில் விஜய் திவஸ்) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை போா் நினைவுச் சின்னத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதியின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி தலைமையில் ராணுவ உயா் அதிகாரிகள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இதில், முப்படைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள், இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த வீரா்களின் தியாகத்தை நினைவுகூா்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.