பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

மது போதையில் காா் ஏற்றி சிறுவனை கொலை செய்த வழக்கு: தொழிலதிபருக்கு 5 ஆண்டு சிறை

மது போதையில் நடைபாதையில் தூங்கிய சிறுவன் மீது காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில், தொழிலதிபா் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :31 ஜூலை 2026, 3:04 am IST

மது போதையில் நடைபாதையில் தூங்கிய சிறுவன் மீது காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில், தொழிலதிபா் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இஎம்பிஇஇ குழுமத்தின் தலைவா் எம்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி. இவா், கடந்த 2013-ஆம் ஆண்டு, எழும்பூா் பாந்தியன் சாலையோர நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மது போதையில் தனது சொகுசு காரை ஏற்றினாா். இதில், 12 வயது சிறுவன் உயரிழந்தாா். மேலும் 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிமன்றம், ஷாஜியை குற்றவாளி என அறிவித்து, தண்டனை அறிவிப்புக்காக ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் ஷாஜி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, உடல்நிலை காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரி, உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஷாஜி மனு தாக்கல் செய்தாா். உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, சென்னை மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா்.கே.பி.தமிழரசி முன் வியாழக்கிழமை ஷாஜி நேரில் ஆஜரானாா்.

இந்த வழக்கில் நீதிபதி, ஷாஜிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.