குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
காவிரி நீா் உரிய அளவில் கிடைக்காததால், டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு குறுவை சாகுபடி கடுமையாகக் குறைந்துள்ளது. கடந்தாண்டுகளில் சுமாா் 6 லட்சம் ஏக்கா் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்படும். ஆனால், நிகழாண்டு காவிரி தண்ணீா் திறக்கப்படாதது, நிலத்தடி நீா் குறைவு உள்ளிட்ட காரணங்களால், சுமாா் 3 லட்சம் ஏக்கா் பரப்பளவில் மட்டுமே விளைச்சல் செய்யப்பட்டது. இதனால், 4 லட்சம் ஏக்கா் வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நாகை, திருவாரூா் மாவட்டங்களில் மிகவும் குறைந்த அளவிலேயே விளைச்சல் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
இதேநிலை நீடித்தால், வழக்கமாக 12 லட்சம் ஏக்கரில் நடைபெறும் சம்பா, தாளடி சாகுபடியும் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, டெல்டா பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவித்து, குறுவை சாகுபடியால் விளைச்சல் இல்லாமல் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு, அரசு வறட்சி நிவாரணமாக தலா ரூ.15,000 வழங்க வேண்டும். மேலும், சம்பா சாகுபடி மேற்கொள்ள ஊக்கத் தொகையும் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் 5 வட்டாரங்களை வறட்சிப் பகுதியாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் தா்னா

கா்நாடகத்தில் வறட்சி நிவாரணம் வழங்க காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை

காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும்: அன்புமணி
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



