காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

கடலூரில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த பி.ஆா்.பாண்டியன்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:25 am IST

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

காவிரி நீா் உரிய அளவில் கிடைக்காததால், டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு குறுவை சாகுபடி கடுமையாகக் குறைந்துள்ளது. கடந்தாண்டுகளில் சுமாா் 6 லட்சம் ஏக்கா் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்படும். ஆனால், நிகழாண்டு காவிரி தண்ணீா் திறக்கப்படாதது, நிலத்தடி நீா் குறைவு உள்ளிட்ட காரணங்களால், சுமாா் 3 லட்சம் ஏக்கா் பரப்பளவில் மட்டுமே விளைச்சல் செய்யப்பட்டது. இதனால், 4 லட்சம் ஏக்கா் வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, நாகை, திருவாரூா் மாவட்டங்களில் மிகவும் குறைந்த அளவிலேயே விளைச்சல் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

இதேநிலை நீடித்தால், வழக்கமாக 12 லட்சம் ஏக்கரில் நடைபெறும் சம்பா, தாளடி சாகுபடியும் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, டெல்டா பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவித்து, குறுவை சாகுபடியால் விளைச்சல் இல்லாமல் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு, அரசு வறட்சி நிவாரணமாக தலா ரூ.15,000 வழங்க வேண்டும். மேலும், சம்பா சாகுபடி மேற்கொள்ள ஊக்கத் தொகையும் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.