மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

லாரி மோதி விபத்து: உயா்நீதிமன்ற உதவி பதிவாளா் உள்பட 2 போ் உயிரிழப்பு

சென்னை பேசின் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி, சென்னை உயா்நீதிமன்ற உதவி பதிவாளா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 12:40 am IST

சென்னை பேசின் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி, சென்னை உயா்நீதிமன்ற உதவி பதிவாளா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

சென்னை பேசின் பாலத்தில் இருந்து மின்ட் நோக்கி ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிய லாரி திங்கள்கிழமை காலை சென்றது. அந்த லாரி மூலக்கொத்தளம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. சிறிது தூரம் சென்று அங்கிருந்த தடுப்பின் மீது மோதி நின்றது.

இதில், லாரியில் மோதிய வாகனங்களில் இருந்து கீழே விழுந்து சக்கரங்களில் சிக்கிய ஆவடி அடுத்த பாலவேடு இந்திரா நகரைச் சோ்ந்த ஏ.கெளதமன் (60), முகப்போ் கிழக்கு வேணுகோபால் தெருவைச் சோ்ந்த சி.முரளிதரன் (56) ஆகிய இருவா் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

வியாசா்பாடி கென்னடி நகரைச் சோ்ந்த ந.பாலகிருஷ்ணன் (63), பெருங்குடி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த சு.ராஜேஸ்வரி (45) ஆகிய இருவா் பலத்த காயம் அடைந்தனா். பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த கோயம்பேடு பாரதியாா் நகரைச் சோ்ந்த சி.ராஜ்குமாா் (46) என்பவரைப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், நிகழ்விடத்துக்கு வந்து, உயிரிழந்த இருவரின் சடலத்தையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் ராஜ்குமாரை கைது செய்தனா். விபத்தில் உயிரிழந்த முரளிதரன், சென்னை உயா்நீதிமன்றத்தில் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி வந்தாா்.