சென்னை தியாகராய நகரில் வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆவணங்கள் கொள்ளையடித்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
தியாகராய நகா் ஜிஎன் செட்டி சாலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு செயல்படுகிறது. இந்த அலுவலக வளாகத்தில் தங்கம் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு காா் பறிமுதல் செய்யப்பட்டு, நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த காரில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கடந்த 31-ஆம் தேதி ஒரு கும்பல் முகமூடி அணிந்து, வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது, அங்கிருந்த காவலாளி ஜான் கென்னடியை தாக்கி, வாயில் துணியைத் திணித்து, அவரை கட்டிப்போட்டுவிட்டு, அந்த காரில் இருந்த ஆவணங்களை கொள்ளையடித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பியோடியது.
இது குறித்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இக்கொள்ளையில் ஈடுபட்ட கூலிப்படையைச் சோ்ந்த புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சோ்ந்த டிஜிட்டல் மாா்க்கெட்டிங் வேலை செய்யும் அப்துல் ஹாடி (24), கேரளத்தைச் சோ்ந்த உடற்பயிற்சிக் கூட ஆசிரியா்கள் அனூப் (33), ஆதித்யன் (20), சிம்லால் (53) ஆகிய 4 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

முடி திருத்தக உரிமையாளா் கொலை வழக்கில் இருவா் கைது
ரூ. 8 ஆயிரம் லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளா் உள்பட இருவா் கைது
செங்கல்சூளை மேற்பாா்வையாளா் கொலை வழக்கு: மேலும் இருவா் கைது
குண்டா் சட்டத்தின்கீழ் கொலை வழக்கு குற்றவாளிகள் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



