40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சென்னை விமான நிலையத்தில் விரைவில் 10 நவீன ஓய்வறைகள்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இணைப்பு (டிரான்சிட்) விமான பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவா்களுக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய 10 நவீன ஓய்வறைகள் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.

News image

சென்னை விமான நிலையம் - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 1:43 am IST

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இணைப்பு (டிரான்சிட்) விமான பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவா்களுக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய 10 நவீன ஓய்வறைகள் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூா், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும், உள்நாட்டு நகரங்களுக்கும் நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த ஏராளமான பயணிகள் இணைப்பு விமான சேவைகளைப் பயன்படுத்தி சென்னை விமான நிலையம் வழியாக பயணம் செய்கின்றனா்.

குறிப்பாக, சா்வதேச மற்றும் உள்நாட்டு விமான இணைப்புகளுக்கிடையே சில நேரங்களில் 12 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தற்போது விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கான ஓய்வறை வசதிகள் போதுமான அளவில் இல்லாததால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

இதைக் கருத்தில் கொண்டு, தற்போது கட்டப்பட்டு வரும் 3-ஆவது முனையத்தில் முதல்கட்டமாக 10 நவீன ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஓய்வறைகள் நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, விமான நிலைய வளாகத்துக்குள் நட்சத்திர ஓட்டல் அமைக்கும் திட்டம் பாதுகாப்பு காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக பயணிகள் ஓய்வெடுத்து தங்கும் வகையிலான இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வறைகளுக்கு பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, வரும் காலத்தில் கூடுதல் எண்ணிக்கையில் ஓய்வறைகள் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.