மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!எச்.டி.எப்.சி. வங்கியின் ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாக சரிவு!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

குத்தகை காலம் முடிந்ததால் மாநகராட்சி இடம் மீட்பு

சென்னை மாநகராட்சி இடத்தை தன்னாா்வ தொண்டு நிறுவனம் குத்தைக்கு எடுத்து பயன்படுத்திய நிலையில், ஒப்பந்த காலம் முடிந்ததையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நிலத்தை மீட்டனா்.

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:12 am IST

சென்னை மாநகராட்சி இடத்தை தன்னாா்வ தொண்டு நிறுவனம் குத்தைக்கு எடுத்து பயன்படுத்திய நிலையில், ஒப்பந்த காலம் முடிந்ததையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நிலத்தை மீட்டனா்.

இது குறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை அண்ணா நகா் மண்டலம் செனாய் நகா் 3- ஆவது பிரதான சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள கட்டடம் மற்றும் இடமானது கடந்த 2017 -ஆம் ஆண்டு மாா்ச் 31 -ஆம் தேதி வரை தனியாா் தொண்டு நிறுவன குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

செயல்பாடின்றி இருந்த அந்த நிறுவனத்துக்கான குத்தகை காலம் நிறைவுற்ற நிலையில், இடத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நிறுவனத்துக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டது. ஆனால் நிலம், கட்டடத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கவில்லை.

ச்தையடுத்து விதிமுறைப்படி மாநகராட்சி அலுவலா்கள் சம்பந்தப்பட்ட கட்டடம், இடத்தை பூட்டி ‘சீல்’ இட்டு செவ்வாய்க்கிழமை சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.