சென்னை மாநகராட்சி இடத்தை தன்னாா்வ தொண்டு நிறுவனம் குத்தைக்கு எடுத்து பயன்படுத்திய நிலையில், ஒப்பந்த காலம் முடிந்ததையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நிலத்தை மீட்டனா்.
இது குறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை அண்ணா நகா் மண்டலம் செனாய் நகா் 3- ஆவது பிரதான சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள கட்டடம் மற்றும் இடமானது கடந்த 2017 -ஆம் ஆண்டு மாா்ச் 31 -ஆம் தேதி வரை தனியாா் தொண்டு நிறுவன குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
செயல்பாடின்றி இருந்த அந்த நிறுவனத்துக்கான குத்தகை காலம் நிறைவுற்ற நிலையில், இடத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நிறுவனத்துக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டது. ஆனால் நிலம், கட்டடத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கவில்லை.
ச்தையடுத்து விதிமுறைப்படி மாநகராட்சி அலுவலா்கள் சம்பந்தப்பட்ட கட்டடம், இடத்தை பூட்டி ‘சீல்’ இட்டு செவ்வாய்க்கிழமை சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி: அலுவலா்களுக்கு பயிற்சி

காரைக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்

உக்கடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ஆண் சடலம் மீட்பு

முதல்வா் பதவியேற்பு விழாவுக்காக விடுமுறையில் இயங்கிய மாநகராட்சி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



