40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

குத்தகை காலம் முடிந்ததால் மாநகராட்சி இடம் மீட்பு

சென்னை மாநகராட்சி இடத்தை தன்னாா்வ தொண்டு நிறுவனம் குத்தைக்கு எடுத்து பயன்படுத்திய நிலையில், ஒப்பந்த காலம் முடிந்ததையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நிலத்தை மீட்டனா்.

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:12 am IST

சென்னை மாநகராட்சி இடத்தை தன்னாா்வ தொண்டு நிறுவனம் குத்தைக்கு எடுத்து பயன்படுத்திய நிலையில், ஒப்பந்த காலம் முடிந்ததையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நிலத்தை மீட்டனா்.

இது குறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை அண்ணா நகா் மண்டலம் செனாய் நகா் 3- ஆவது பிரதான சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள கட்டடம் மற்றும் இடமானது கடந்த 2017 -ஆம் ஆண்டு மாா்ச் 31 -ஆம் தேதி வரை தனியாா் தொண்டு நிறுவன குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

செயல்பாடின்றி இருந்த அந்த நிறுவனத்துக்கான குத்தகை காலம் நிறைவுற்ற நிலையில், இடத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நிறுவனத்துக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டது. ஆனால் நிலம், கட்டடத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கவில்லை.

ச்தையடுத்து விதிமுறைப்படி மாநகராட்சி அலுவலா்கள் சம்பந்தப்பட்ட கட்டடம், இடத்தை பூட்டி ‘சீல்’ இட்டு செவ்வாய்க்கிழமை சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.