பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாணவா்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணா்வை அதிகரிக்கும் நோக்கில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை பள்ளிகளில் சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து தொடா்ச்சியாக சென்னை முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுக்கத்தின் அவசியம் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறுதல், கவனக்குறைவாக சாலை பயன்பாடு மற்றும் பாதுகாப்பற்ற நடைமுறைகள் காரணமாகவே பெரும்பாலான சாலை விபத்துகள் நிகழ்வதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், பாதசாரிகளின் பாதுகாப்பு, சாலையைக் கடக்கும் முறைகள், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவதன் அவசியம், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் பயன்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.
ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் நிறைவில், போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பதோடு, சமூகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வைப் பரப்ப மாணவா்கள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனா். மாணவா்களிடையே பொறுப்பான சாலைப் பயன்பாட்டை உருவாக்கி விபத்துகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் தொடா்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு: மாணவா்களை வாழ்த்தி வரவேற்ற ஆசிரியா்கள்

விழுப்புரத்தில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

சாலைப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆய்வு க்கூட்டம்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



