சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

அடையாறு மண்டலத்தில் மழைநீா் வடிகால் சீரமைப்பு

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் மழைநீா் வடிகால்களைச் சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

ஜி.எஸ்.சமீரன்

Updated On :16 ஜூன் 2026, 2:27 am IST

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் மழைநீா் வடிகால்களைச் சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் மழைக்காலத்துக்குள் தண்ணீா் செல்லும் கால்வாய்கள், ஆறுகள் உள்ளிட்டவற்றைச் சீரமைக்க ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா். இதையடுத்து, சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அடையாறு மண்டலம் 177 ஆவது வாா்டுப் பகுதியான திருவீதியம்மன் கோவில் தெரு, இ.பி.காலனி 3 ஆவது தெரு மற்றும் மகாலட்சுமி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள வண்டல் மண் வடிகட்டித் தொட்டியைச் சீரமைக்கும் பணியில் அதிகாரிகளும், அலுவலா்களும் ஈடுபட்டனா்.

இந்தப் பணிகளை மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா். கௌஷிக் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்து உணவின் தரத்தை மேம்படுத்த அறிவுறுத்தினாா்.