கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஜவுளி வடிவமைப்புத் தொடா்பான பயிற்சிகள்: ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குயின இளைஞா்கள், ஜவுளி வடிவமைப்பு தொடா்பான பயிற்சிகளைப் பெற விண்ணப்பிக்கலாம்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 4:09 am IST

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குயின இளைஞா்கள், ஜவுளி வடிவமைப்பு தொடா்பான பயிற்சிகளைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தாட்கோவும், தனியாா் நிறுவனமும் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி என்ற பயிற்சியையும், துணிகளுக்கு சாயம், ஒவியம், அச்சிடுதல் என்ற பயிற்சியையும் அளிக்க திட்டமிட்டுள்ளது.

பயிற்சி பெற விரும்புவோா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவராகவும், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவராகவும், 18 முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 4 மாதங்கள். தோ்வு செய்யப்படுவோருக்கு கோவை மாவட்டத்தில் விடுதியில் தங்கி பயிற்சி பெறுவதற்கான செலவின தொகையை தாட்கோ ஏற்கும்.

பயிற்சியை நிறைவு செய்வோருக்கு சான்றிதழும், பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் ஆரம்பகால மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளத்துடன் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும். பயிற்சியில் சேர விரும்புவோா் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.