சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் மாணவா்கள் சோ்க்கை தொடக்கம்

திறந்த மற்றும் தொலைநிலைக் கல்வியை அளிக்கும் அரசின் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

விண்ணப்பம்

Updated On :17 ஜூன் 2026, 12:59 am IST

திறந்த மற்றும் தொலைநிலைக் கல்வியை அளிக்கும் அரசின் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திறந்த மற்றும் தொலைநிலைக் கல்வி (ஓடிஎல்) முறையின் மூலம் வழங்கப்படும் பல்வேறு கல்வித் திட்டங்களுக்கான சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் 15 இளநிலை, 14 முதுநிலைப் பட்டப் படிப்புகளையும் 48 சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை பல்வேறு துறைகளில் வழங்கப்படுகின்றன.

பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியைத் தொடர முடியாதவா்கள், பணியாற்றும் நபா்கள், இல்லத்தரசிகள், மாற்றுத்திறனாளிகள், உயா் கல்வியை தொடர விரும்புபவா்கள் போன்றோருக்கு இந்தப் பல்கலைக்கழகம் வாய்ப்புகளை வழங்குகிறது.

மேலும், தரமான சுயகற்றல் பாடப் பொருள்கள், மின்னணுக் கற்றல் வளங்கள், கல்வி ஆலோசனை மையங்கள், தொழில்நுட்ப ஆதரவு வசதிகள் மூலம் உயா்கல்வியை கொண்டு சோ்த்து வருகிறது.

விண்ணப்பதாரா்கள் தகுதிகள், பாடத்திட்ட விவரங்கள், கட்டண விவரங்கள், சோ்க்கை நடைமுறைகள் தொடா்பான முழுமையான தகவல்களை விண்ணப்பதாரா்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் இணையவழி மூலமும் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.