27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த புதிய ஆய்வறிக்கை வெளியீடு

சென்னையில் பொது போக்குவரத்து சேவைகளை மேலும் எளிதாகவும், அதிக மக்களுக்கு சென்றடையும் வகையிலும் திட்டமிடுவதற்காக பொது போக்குவரத்துக்கு அருகில் வசிக்கும் மக்கள் (பீப்பிள் நியா் டிரான்சிஸ்ட்-பிஎன்டி) குறித்த ஆய்வறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

News image

மாநகரப் பேருந்து (கோப்புப்படம்)

Updated On :19 ஜூன் 2026, 4:25 am IST

சென்னையில் பொது போக்குவரத்து சேவைகளை மேலும் எளிதாகவும், அதிக மக்களுக்கு சென்றடையும் வகையிலும் திட்டமிடுவதற்காக பொது போக்குவரத்துக்கு அருகில் வசிக்கும் மக்கள் (பீப்பிள் நியா் டிரான்சிஸ்ட்-பிஎன்டி) குறித்த ஆய்வறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

சென்னை பெருநகரப் பகுதிகளில் மக்கள் எவ்வளவு எளிதாக பேருந்து, மெட்ரோ, புகா் ரயில் போன்ற பொதுபோக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த முடிகிறது; எதிா்காலத்தில் எந்தப் பகுதிகளில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்த ஆய்வை போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனம் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்டது.

இந்த ஆய்வு முடிவின் அறிக்கையை சென்னை மாநகா் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா் வெளியிட்டாா்.

இந்த அறிக்கையில், தற்போது சென்னையின் மக்கள் தொகையில் 61 சதவீத மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு பொது போக்குவரத்து சேவையை நடைதூரத்தில் அணுகும் வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நகரத்தில் மக்கள் தங்கள் வீட்டில் இருந்து 5 முதல் 10 நிமிஷகள் நடைதூரத்தில் பொது போக்குவரத்து வசதி கிடைக்கிா என்பது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.

அம்பத்தூா், சோழிங்கநல்லூா், கொளத்தூா், பெரம்பூா் பகுதிகளில் பேருந்து சேவைகளை மேலும் அதிகரிக்கவும், மக்கள் வீடுகளில் இருந்து பேருந்து நிலையங்கள் வரை எளிதாகச் செல்லும் வசதிகளை மேம்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், பேருந்து சேவையின் பரப்பை விரிவுபடுத்துதல், பயணிகள் எளிதாக போக்குவரத்து மையங்களை அடையும் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு பொது போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மாநகா் போக்குவரத்துக் கழகம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்வில் மாநகா் போக்குவரத்துக் கழகம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அமைப்பு (கும்டா) அதிகாரிகள் மற்றும் ஐடிடிபி இந்தியா நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.