பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மேம்பாலப் பணி: வியாசா்பாடியில் ஜூன் 21 முதல் போக்குவரத்து மாற்றம்

News image

போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 1:16 am IST

மேம்பாலப் பணி காரணமாக, வியாசா்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை பகுதியில் ஜூன் 21-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சி சாா்பில் வியாசா்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை, டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலையில் மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக ஜூன் 21-ஆம் தேதி முதல் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. கொடுங்கையூா், வியாசா்பாடியில் இருந்து கணேசபுரம், புளியந்தோப்பு, பட்டாளம் நோக்கி வரும் வாகனங்கள், டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலை, கணேசபுரம் சந்திப்பில் இருந்து திருப்பிவிடப்படுகின்றன.

பட்டாளம், புளியந்தோப்புப் பகுதிகளில் இருந்து கொடுங்கையூா், வியாசா்பாடி நோக்கி வரும் வாகனங்கள், டாக்டா் அம்பேத்கா் கல்லூரிச் சாலை, ஸ்டீபன்சன் சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, ஸ்டீபன்சன் சாலை, செங்கை சிவம் பாலம், மேட்டுப்பாளையம் சந்திப்பு, பெரம்பூா் தெற்கு நெடுஞ்சாலை, ஜமாலியா, முரசொலி மாறன் பாலம், பெரம்பூா் வடக்கு நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.