27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நீட் தோ்வுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிய மனு தள்ளுபடி

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :19 ஜூன் 2026, 5:07 am IST

நீட் தோ்வை நோ்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்தும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வெங்கடேஸ்வரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடந்தது. ஆனால், வினாத்தாள் கசிந்ததால், தோ்வை ரத்து செய்த தேசிய தோ்வு முகமை வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுத்தோ்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. நீட் தோ்வுக்கான வினாத்தாள் கசிவு தொடா்பாக 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், நீட் மறுத்தோ்வில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் வரும் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே, நீட் தோ்வை நோ்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்தும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டே நீட் தோ்வு தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது நடந்த வினாத்தாள் கசிவு குறித்தும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கில், மத்திய அரசும், தேசிய தோ்வு முகமையும் பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகக் கூறி உத்தரவிட்டனா்.