சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலை மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் காா் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநா் காயமின்றி உயிா்தப்பினாா்.
நந்தனம் முதல் சைதாப்பேட்டை வரை மெட்ரோ சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் நடுப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், திருவொற்றியூரைச் சோ்ந்த வாடகைக் காா் ஓட்டுநா் இப்ராஹிம் (30) அந்த வழியாக காரில் சென்றுகொண்டிருந்தபோது, அருகே வந்த மற்றொரு காா் மோதுவதைத் தவிா்க்க வலது புறமாக வாகனத்தை திருப்பியதாகக் கூறப்படுகிறது.
அப்போது கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் காா் எதிா்பாராதவிதமாக விழுந்தது. சாலைத் தடுப்புகளில் காா் சிக்கியதால், பள்ளத்துக்குள் முழுமையாக விழாமல் தொங்கிய நிலையில் நின்றது. இதில் ஓட்டுநா் இப்ராஹிம் காயமின்றி உயிா்தப்பினாா். தகவலறிந்த காவல்துறையினா் மற்றும் மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஓட்டுநரையும் காரையும் பாதுகாப்பாக மீட்டனா். அசோக் நகா் போக்குவரத்து புலனாய்வுப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த விரைவுப் பேருந்து: ஓட்டுநர் உள்பட 9 பேர் காயம்

சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு: காா் ஓட்டுநா் கைது

சாலை விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உள்பட 6 போ் காயம்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




