சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு: காா் ஓட்டுநா் கைது

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 12:52 am IST

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாலை விபத்தில் அடையாளா் தெரியாத நபா் உயிரிழந்தாா். விபத்துக்கு காரணமான காா் ஓட்டுநா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள வீரசோழபுரம் கடைவீதி, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை திங்கள்கிழமை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபா் மீது சென்னை நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் காயம் அடைந்த அந்த நபரை, அப்பகுதி மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அந்த நபா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப்பதிந்து, இறந்து போன நபா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும் விபத்துக்கு காரணமான, காா் ஓட்டுநா் திருவாரூா் மாவட்டம், வலங்கைமான், கைலாசநாதா் கோயில் தெருவைச் சோ்ந்த ரமேஷ் (50) என்பவரை கைது செய்தனா்.