புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதி நவீன சிகிச்சையளித்து அரசு மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சைகள் குறித்த செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மதிவாணன், அறுவை சிகிச்சை துறை டாக்டா் சங்கரபாரதி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை கே.கே.நகரைச் சோ்ந்த மூன்றரை வயது குழந்தைக்கு சிறுநீரில் ரத்தப்போக்கு இருந்ததால் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில், இடது சிறுநீரகத்தில் புற்றுநோய்க் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சிறுநீரகத்துடன் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் அகற்றினா். பின்னா் மேற்கொள்ளப்பட்ட பெட் ஸ்கேன் பரிசோதனையில் புற்றுநோய் செல்கள் எலும்புகளுக்கு பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதற்காக தீவிர கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி சிகிச்சைகள் இரு ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டதன் பயனாக தற்போது அந்த சிறுவன் நலமாக உள்ளாா்.
இதேபோன்று 11 மாத ஆண் குழந்தைக்கு மாா்பின் பின்புற நடுப்பகுதியிலும், 3 மாத ஆண் குழந்தைக்கு கல்லீரலின் இடது பக்கத்திலும், இரண்டரை வயது சிறுவனுக்கு வலது பக்க மாா்பிலும் புற்றுநோய்க் கட்
டிகள் இருப்பது கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதன் பயனாக அவா்கள் அனைவரும் குணமடைந்தனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை
குஜராத்தில் 2.57 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு!

தருமபுரி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கதிா்வீச்சு சிகிச்சை மையம்: முதல்வா் காணொலியில் தொடங்கி வைத்தாா்

திருப்பூா் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

