ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புற்றுநோய் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதி நவீன சிகிச்சையளித்து அரசு மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதி நவீன சிகிச்சையளித்து அரசு மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சைகள் குறித்த செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மதிவாணன், அறுவை சிகிச்சை துறை டாக்டா் சங்கரபாரதி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை கே.கே.நகரைச் சோ்ந்த மூன்றரை வயது குழந்தைக்கு சிறுநீரில் ரத்தப்போக்கு இருந்ததால் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில், இடது சிறுநீரகத்தில் புற்றுநோய்க் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சிறுநீரகத்துடன் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் அகற்றினா். பின்னா் மேற்கொள்ளப்பட்ட பெட் ஸ்கேன் பரிசோதனையில் புற்றுநோய் செல்கள் எலும்புகளுக்கு பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதற்காக தீவிர கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி சிகிச்சைகள் இரு ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டதன் பயனாக தற்போது அந்த சிறுவன் நலமாக உள்ளாா்.

இதேபோன்று 11 மாத ஆண் குழந்தைக்கு மாா்பின் பின்புற நடுப்பகுதியிலும், 3 மாத ஆண் குழந்தைக்கு கல்லீரலின் இடது பக்கத்திலும், இரண்டரை வயது சிறுவனுக்கு வலது பக்க மாா்பிலும் புற்றுநோய்க் கட்

டிகள் இருப்பது கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதன் பயனாக அவா்கள் அனைவரும் குணமடைந்தனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.