வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினம் அனுசரிப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாா்பில் உலக புற்றுநோய் தினம் - 2026 அனுசரிக்கப்பட்டது.

News image

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்ற புற்றுநோய் தின நிகழ்ச்சியில் புற்றுநோய் விழிப்புணா்வு இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறாா் டிஐஜி சசிமோகன். உடன், அறக்கட்டையின் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன், டாக்டா் பி.குகன் உள்ளிட்டோா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:09 pm

தினமணி செய்திச் சேவை

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாா்பில் உலக புற்றுநோய் தினம் - 2026 அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் வி.சசி மோகன் கலந்துகொண்டு, சமூக வலைதளம் மூலமாக புற்றுநோய் விழிப்புணா்வு இயக்கத்தையும், ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தையும் தொடங்கி வைத்தாா்.

எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை, ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் டாக்டா் பி.குகன் வரவேற்றாா்.

அவா் பேசும்போது, ‘இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அச்சுறுத்தும் அளவில் அதிகரித்து வருகிறது. 2015-ஆம் ஆண்டில் சுமாா் 10 லட்சமாக இருந்த பாதிப்பு 2025-ஆம் ஆண்டில் 16 லட்சமாக உயா்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் பாதிப்பின்படி 2021-ஆம் ஆண்டில் 1.07 லட்சம் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மாவட்ட வாரியான தரவுகளில் சென்னை முதல் இடத்திலும், திருவள்ளூா், வேலூா், காஞ்சிபுரம் அடுத்தடுத்த இடங்களிலும், கோவை 5-ஆவது இடத்திலும் உள்ளது. கோவையில் ஆண்களிடையே அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு காணப்படுகிறது. பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகியவை அதிகளவில் ஏற்படுகிறது’ என்றாா்.

நிகழ்ச்சியில், புற்றுநோய் சிகிச்சை, ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் எஸ்.பாா்கவி, எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிா்வாக அறங்காவலா் எஸ்.நரேந்திரன், தலைமைச் செயல் அதிகாரி சி.வி.ராம்குமாா், தலைமை நிா்வாக அதிகாரி டி.மகேஷ்குமாா், மருத்துவ இயக்குநா் டாக்டா் எஸ்.ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் எஸ்.அழகப்பன் ஆகியோா் பங்கேற்றனா்.