ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனையில் புதிய கருவியை  புதன்கிழமை தொடக்கிவைத்த பெல் நிறுவனச் செயல் இயக்குநா் எஸ். பிரபாகா். உடன் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் செந்தில், இயக்குநா் கவிதா செந்தில், ஒமேகா மருத்துவமனைத் தலைவா் ஹரகோவிந்த்,  இயக்குநா் பத்மஜா மோகன
ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனையில் புதிய கருவியை புதன்கிழமை தொடக்கிவைத்த பெல் நிறுவனச் செயல் இயக்குநா் எஸ். பிரபாகா். உடன் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் செந்தில், இயக்குநா் கவிதா செந்தில், ஒமேகா மருத்துவமனைத் தலைவா் ஹரகோவிந்த், இயக்குநா் பத்மஜா மோகன

ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை புதிய பிரிவு

திருச்சி ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கான புதிய பிரிவு மற்றும் நவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Published on

திருச்சி ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கான புதிய பிரிவு மற்றும் நவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனையில் இயங்கிவரும், ஜிவிஎன் புற்றுநோய் நிறுவனமானது, ஒமேகா குழும மருத்துவமனையுடன் இணைந்து அமைத்துள்ள புதிய பிரிவை திருச்சி பெல் நிறுவனத்தின் செயலாண்மை இயக்குநா் எஸ். பிரபாகரும், அதிநவீன ரோபோடிக் கதிா்வீச்சு சிகிச்சை கருவியின் செயல்பாட்டை டால்மியா சிமென்ட்ஸ் இயக்குநா் (ஓய்வு) கோபாலசாமியும் தொடங்கி வைத்தனா். ஒமேகா மருத்துவமனை குழும இயக்குநா் பத்மஜா மோகனவம்சி, தலைவா் ஹர கோவிந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவமனை இயக்குநா் கவிதா செந்தில், மருத்துவா் விஷ்வேஸ்வா் செந்தில், முதன்மைச் செயல் அதிகாரி சக்தி யாதவ், புற்றுநோய் சிகிச்சை நிபுணா் அருண் சேஷாசலம், புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணா்கள் சேவியா், சோபியா ராஜேஷ், தாம்சன் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய பிரிவின் செயல்பாடுகள் குறித்து மருத்துவா் சோபியா ராஜேஷ் கூறுகையில், தென் தமிழகத்தில் முதன்முறையாக ரோபோடிக் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் துல்லிய சிகிச்சை அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட கதிா்வீச்சு சிகிச்சை பிரிவு மற்றும் நவீன கருவி ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள ஜிவிஎன் மருத்துவமனையில் வேரியன் யுனிக் கருவி மூலம் இதுவரை புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது புதிய பரிமாணமாக ஜிவிஎன் ரிவா்சைடு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட புதிய கதிரியக்க சிகிச்சை கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய கருவியில் ஏற்கெனவே உள்ள பழைய சிகிச்சை முறைகளுடன் சிறப்பு சிகிச்சைகளான எஸ்ஆா்டி, எஸ்ஆா்எஸ் உள்ளிட்ட நவீன சிகிச்சைகள் அளிக்க முடியும். இந்த சிகிச்சையின் மூலம் குறுகிய நாள்களில் (ஒன்று முதல் 5 நாள்களுக்குள்) புற்றுநோய் கட்டிகளை மிக துல்லியமாக குணப்படுத்த முடியும்.

எஸ்ஆா்எஸ் சிகிச்சை முறையில் ஒரே நாளில் பல சிறிய புற்றுநோய் கட்டிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன், புதிய நவீன கருவி மூலம் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் எடுக்க முடியும். இந்த நவீன கருவியில் நோயாளியின் படுக்கையானது 6டி ரோபோடிக் படுக்கையாக இருப்பதால் மிக துல்லியமாக சிகிச்சை அளிக்க முடியும். புற்றுநோய் கட்டிகளை மட்டுமல்லாது சாதாரணக் கட்டிகள், நரம்பு கட்டிகள் மற்றும் நரம்பு வலிக்கான சிகிச்சையும் துல்லியமாக அளிக்க முடியும் என்றாா் அவா். ஜிவிஎன் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் செந்தில் வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com