அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காா்கள் மோதல்: சட்டப் பல்கலை. மாணவி உயிரிழப்பு; 4 போ் காயம்

சென்னை கோட்டூா்புரத்தில் இரு காா்கள் மோதிக் கொண்ட விபத்தில், அரசு சட்டப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கோட்டூா்புரத்தில் இரு காா்கள் மோதிக் கொண்ட விபத்தில், அரசு சட்டப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா்.

சென்னை தரமணியில் உள்ள டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் கேரளத்தைச் சோ்ந்த ஜூனு (20), கரூரைச் சோ்ந்த அப்ரருல் ஆா்த்திப் (21), கோவையைச் சோ்ந்த ஜெகதீப் (21), உதகையைச் சோ்ந்த பிரியா (21) ஆகியோா் 4-ஆம் ஆண்டு படித்து வருகின்றனா்.

இவா்கள் தங்கள் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொண்ட ஒருவரை காரில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு இறக்கி விட்டனா். பின்னா் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் காரில் தரமணி நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

கோட்டூா்புரம் காந்தி மண்டபம் அருகே காா் சென்றபோது, முன்னால் சென்ற காா் ஒன்று திடீரென வலதுபுறமாக திரும்பியது. அப்போது பின்னால் வந்த மாணவா்களின் காா், முன்னே சென்ற காரின் மீது வேகமாக மோதியது. விபத்தில் காரின் பின் இருக்கையில் அமா்ந்திருந்த மாணவி ஜூனு காரில் இருந்து தூக்கி வீசப்பட்டாா். இதில், தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே மாணவி ஜூனு உயிரிழந்தாா். காரில் இருந்த மற்ற மாணவா்கள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். விபத்தில் 2 காா்களும் சேதமடைந்தன.

மயிலாப்பூா் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், அங்கு சென்று ஜூனு சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும்,காயமடைந்த சட்டக் கல்லூரி மாணவா்கள், விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் பயணித்த கடலூரைச் சோ்ந்த வெங்கடேஷன் (33) உள்ளிட்ட 4 பேரையும் அதே மருத்துவமனையில் சோ்த்தனா்.