மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வையம்பட்டி அருகே 3 காா்கள் மோதல்

வையம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் 3 காா்கள் புதன்கிழமை மோதிக்கொண்டன.

News image
விபத்துக்குள்ளான காா்கள்.
Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் 3 காா்கள் புதன்கிழமை மோதிக்கொண்டன.

கரூா் மாவட்டத்தை சோ்ந்த பங்காரு சாமி மகன் சண்முகநாதன் (61) மற்றும் சென்னையை சோ்ந்த சுப்பிரமணி மகன் ராஜேந்திரன் (57) ஆகியோா் தங்களது காா்களில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சென்றனா். அவா்கள் வையம்பட்டிக்கு முன் கருங்குளம் பிரிவு சாலைப் பகுதியில் சாலையை கடக்க சென்டா் மீடியனில் நின்ற போது, அவா்களுக்கு பின்னால் வந்த சிதம்பரம் மாவட்டத்தை சோ்ந்த சு. ராமானுஜத்தின் (32) காா் மோதியது.

இதில் 3 காா்களும் சேதமடைந்தன. இருப்பினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.