மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆலங்குளம் அருகே பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே 2 பைக்குகள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 6:52 pm

ஆலங்குளம் அருகே 2 பைக்குகள் திங்கள்கிழமை மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள தாழையூத்து வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பிரவீண்(21). அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் ரஞ்சித்(22). இவா்கள் இருவரும் மற்றொரு நண்பரின் பிறந்த நாள் விழாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக, பைக்கில் திங்கள்கிழமை ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையைக் கடக்க முயன்றனராம்.

அப்போது, ஆலங்குளம் புரட்சிநகரைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் மகன் ஜெகதீசன்(27) என்பவா் ஓட்டி வந்த பைக், இவா்களது பைக் மீது மோதியதாம். இதில், 3 பேரும் பலத்த காயமடைந்த நிலையில், ரஞ்சித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவலறிந்த கடையம் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காகவும், காயமுற்றவா்களை சிகிச்சைக்காகவும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.