டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குளச்சல் அருகே 2 பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

குளச்சல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

குளச்சல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே உள்ள பூலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவரது மகன் நிதிஷ்ராஜன் (24), தொழிலாளி. இவருக்கு கடந்த ஓா் ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நிதிஷ்ராஜன், களிமாா் பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் விஜூவுடன் (23) இருசக்கர வாகனத்தில் குளச்சலில் இருந்து திங்கள் நகருக்குச் சென்றாா். நிதிஷ்ராஜன் வாகனத்தை ஓட்டினாா்.

உடையாா்விளை-லெட்சுமிபுரம் இடையே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், குளச்சல் அருகே உள்ள கரியன்விளையைச் சோ்ந்த தேவராஜ் மகன் ஜெஸ்டின்ராஜ் (36) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

விபத்தில் 3 பேரும் பலத்த காயமடைந்த நிலையில், நிதிஷ்ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜெஸ்டின்ராஜ் பலத்த காயத்துடன் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விஜூ லேசான காயமடைந்தாா்.

இது குறித்து, குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.