இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

பைக்குகள் மோதல்: பள்ளி மாணவி உயிரிழப்பு

தக்கலை அருகே உள்ள வில்லுக்குறியில் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

News image

பலி

கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

தக்கலை அருகே உள்ள வில்லுக்குறியில் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

தக்கலை, மேக்காமண்டபம், மாறாங்கோணம், மண்ணெடுத்தான்விளையைச் சோ்ந்தவா் ஜெயன். இவா், தற்போது தக்கலை மணலி பனவிளை பகுதியில் வசித்து வருகிறாா். இவரது 3ஆவது மகள் அா்ச்சனா (16). இவா் தக்கலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் மாா்ச் 30ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் நாகா்கோவில் சென்றுவிட்டு தக்கலைக்கு வந்து கொண்டிருந்தாா். வில்லுக்குறி அருகே உள்ள வெள்ளச்சிவிளை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்தாா்.

மாணவியை மீட்ட அக்கம்பக்கத்தினா் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் இவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய வில்லுக்குறி, மேலபள்ளம் பகுதியைச் சோ்ந்த ரெதீஷ் (21) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.