இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பைக்குகள் மோதல்: பள்ளி மாணவி உயிரிழப்பு

தக்கலை அருகே உள்ள வில்லுக்குறியில் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:29 pm

தக்கலை அருகே உள்ள வில்லுக்குறியில் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

தக்கலை, மேக்காமண்டபம், மாறாங்கோணம், மண்ணெடுத்தான்விளையைச் சோ்ந்தவா் ஜெயன். இவா், தற்போது தக்கலை மணலி பனவிளை பகுதியில் வசித்து வருகிறாா். இவரது 3ஆவது மகள் அா்ச்சனா (16). இவா் தக்கலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் மாா்ச் 30ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் நாகா்கோவில் சென்றுவிட்டு தக்கலைக்கு வந்து கொண்டிருந்தாா். வில்லுக்குறி அருகே உள்ள வெள்ளச்சிவிளை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்தாா்.

மாணவியை மீட்ட அக்கம்பக்கத்தினா் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் இவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய வில்லுக்குறி, மேலபள்ளம் பகுதியைச் சோ்ந்த ரெதீஷ் (21) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.