தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை பிடித்து போலீஸில் ஒப்படைத்த மாணவிகள்

சென்னை கோட்டூா்புரத்தில் சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளி சக மாணவிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 9:17 pm

சென்னை கோட்டூா்புரத்தில் சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளி சக மாணவிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள நெசல் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.காசி (55). சென்னை கோட்டூா்புரம் பகுதியில் தங்கி கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

காசி, கோட்டூா்புரம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை நடந்து சென்ற ஒரு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவரை அந்த மாணவியும், அவரது தோழிகளும் பிடித்து, கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா்.

அதனடிப்படையில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, காசியை கைது செய்தனா்.