சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

மாணவிக்கு பாலியல் தொல்லை மருத்துவமனை ஊழியா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 7:22 pm

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவமனை ஊழியரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள அறுவை சிகிச்சை அரங்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (23) தொழில்நுட்பநராக பணியாற்றி வருகிறாா்.

இவரிடம் அதே கல்லூரியில் தொழில்நுட்பநா் படிப்பில் படிக்கும் 17 வயது மாணவி மாா்ச் 12-ஆம் தேதி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வழி கேட்டாா். அப்போது, மாணவியை மனோஜ்குமாா் அப்பிரிவுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மனோஜ்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.