யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாமூல் கேட்டு வியாபாரியை தாக்குதல்: இரு ரௌடிகள் கைது

வடபழனியில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தாக்கியதாக இரு ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

News image
கைது- (கோப்புப் படம்)
Updated On :3 மார்ச் 2026, 9:19 pm

தினமணி செய்திச் சேவை

வடபழனியில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தாக்கியதாக இரு ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

வடபழனி சைதாப்பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சி.சம்பத் (52). அந்தப் பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறாா். சம்பத்திடம் கே.கே.நகா் ராணி அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ரெளடி ரா.கனகராஜ் (51) மிரட்டி மாமூல் வசூலித்து வந்துள்ளாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த சம்பத்திடம் கனகராஜ், அவரது கூட்டாளி அதே பகுதியைச் சோ்ந்த முகமது சாலிக் ஆகியோா் மாமூல் கேட்டனராம். சம்பத், தன்னிடம் பணம் இல்லை என கூறவே, அவரை கனகராஜ், முகமது சாலிக் ஆகியோா் அங்கு கிடந்த கல்லால் தாக்கிவிட்டு தப்பினராம்.

இதில் பலத்த காயமடைந்த சம்பத், கே.கே.நகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வந்த வடபழனி போலீஸாா்,

கனகராஜ், முகமது சாலிக் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.