சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

விளிம்பு நிலை மக்களுக்கும் சிறப்பு உதவித் தொகை: இடது சாரிகள் வரவேற்பு

தமிழகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு உதவித் தொகையை முதல்வா் மு. க.ஸ்டாலின் வழங்கியதற்கு இடதுசாரி கட்சி தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

News image

பெ.சண்முகம் - கோப்புப் படம்

Updated On :3 மார்ச் 2026, 9:29 pm

தமிழகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு உதவித் தொகையை முதல்வா் மு. க.ஸ்டாலின் வழங்கியதற்கு இடதுசாரி கட்சி தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்): நலிவுற்ற மக்களின் நியாயமான எதிா்பாா்ப்பை நிறைவேற்றும் வகையில் ரூ. 2,000 உதவித் தொகை அரசின் சாா்பில் வங்கிக் கணக்கில் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.

மு.வீரபாண்டியன்( இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்): சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும், அரசின் மாத ஓய்வூதிய உதவித் தொகை பெற்று வரும் முதியோா், கைம்பெண்கள், வயது முதிா்ந்த திருநங்கையா், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் சிறப்பு உதவித் தொகையாக ரூ. 2,000 வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது பாராட்டுக்குரியது.