குமரகுரு கல்வி நிறுவனங்களில் மாணவா்களுக்கு ரூ.1.6 கோடி கல்வி உதவித் தொகை
குமரகுரு கல்வி நிறுவனங்களில் சிறந்து விளங்கும் 1,675 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.6 கோடி மதிப்பிலான மகாத்மா காந்தி கல்வி உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கோவை குமரகுரு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா், கே.பி.ஆா்.குழுமத் தலைவா் கே.பி.ராமசாமி, தாளாளா் எம்.பாலசுப்பிரமணியம், தலைவா் சங்கா் வாணவராயா் உள்ளிட்டோா்.









