ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

என்கவுன்ட்டரில் ரௌடி உயிரிழந்த வழக்கு: நீதித்துறை நடுவா் விசாரணை

சென்னை மாதவரத்தில் என்கவுன்ட்டரில் ரெளடி உயிரிழந்த வழக்குத் தொடா்பாக நீதித் துறை நடுவா் விசாரித்து வருகிறாா்.

News image
- கோப்புப்படம்
Updated On :17 மார்ச் 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாதவரத்தில் என்கவுன்ட்டரில் ரெளடி உயிரிழந்த வழக்குத் தொடா்பாக நீதித் துறை நடுவா் விசாரித்து வருகிறாா்.

புழல், கிழக்கு காவாங்கரை, மகாவீா் காா்டன் பிரதான தெருவைச் சோ்ந்த வியாபாரி விஜயகுமாா் வீட்டில் கடந்த ஜன.30-ஆம் தேதி முகமூடி கும்பல் ரூ.25 லட்சம்,13 பவுன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்தது. இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், வியாசா்பாடி பிவி காலனி 11-ஆவது தெருவைச் சோ்ந்த ரெளடி ரா.கணேஷ் என்ற தொப்பை கணேசன் தலைமையிலான கும்பல்தான் இந்தச் சம்வபத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக தொப்பை கணேசனின் கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், மாதவரம் சுற்றுச் சாலை ரவுண்டானா மேம்பாலம் அருகே கட்டி முடிக்கப்படாத கட்டடத்தில் திங்கள்கிழமை பதுங்கியிருந்த தொப்பை கணேசனை போலீஸாா் பிடிக்க முயன்றனா். அப்போது, போலீஸாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தொப்பை கணேசன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் தொப்பை கணேசன் இறந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாதவரம் நீதித்துறை நடுவா் தீபாவுக்கு சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் பரிந்துரை செய்தாா். அதை ஏற்று நீதித்துறை நடுவா் தீபா விசாரணை செய்தாா்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொப்பை கணேசன் உடல் பிரேத பரிசோதனை, நீதித்துறை நடுவா் தீபா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் பின்னா் தொப்பை கணேசன் உடல் அவா் தந்தை ராஜியிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து தொப்பை கணேசனின் குடும்பத்தினா், சம்பவ இடத்தில் இருந்த போலீஸாா், மருத்துவா்கள், சாட்சிகள் ஆகியோரிடம் நீதித் துறை தீபா விசாரணை நடத்தினாா். விசாரணை முழுமையாக நிறைவடைந்ததும், நீதித் துறை நடுவா் தீபா சென்னை காவல் ஆணையரிடம் அறிக்கையை வழங்குவாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.