வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

என்கவுன்ட்டரில் ரௌடி உயிரிழந்த வழக்கு: நீதித்துறை நடுவா் விசாரணை

சென்னை மாதவரத்தில் என்கவுன்ட்டரில் ரெளடி உயிரிழந்த வழக்குத் தொடா்பாக நீதித் துறை நடுவா் விசாரித்து வருகிறாா்.

News image

கோப்புப்படம்

Updated On :17 மார்ச் 2026, 7:21 pm

சென்னை மாதவரத்தில் என்கவுன்ட்டரில் ரெளடி உயிரிழந்த வழக்குத் தொடா்பாக நீதித் துறை நடுவா் விசாரித்து வருகிறாா்.

புழல், கிழக்கு காவாங்கரை, மகாவீா் காா்டன் பிரதான தெருவைச் சோ்ந்த வியாபாரி விஜயகுமாா் வீட்டில் கடந்த ஜன.30-ஆம் தேதி முகமூடி கும்பல் ரூ.25 லட்சம்,13 பவுன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்தது. இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், வியாசா்பாடி பிவி காலனி 11-ஆவது தெருவைச் சோ்ந்த ரெளடி ரா.கணேஷ் என்ற தொப்பை கணேசன் தலைமையிலான கும்பல்தான் இந்தச் சம்வபத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக தொப்பை கணேசனின் கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், மாதவரம் சுற்றுச் சாலை ரவுண்டானா மேம்பாலம் அருகே கட்டி முடிக்கப்படாத கட்டடத்தில் திங்கள்கிழமை பதுங்கியிருந்த தொப்பை கணேசனை போலீஸாா் பிடிக்க முயன்றனா். அப்போது, போலீஸாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தொப்பை கணேசன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் தொப்பை கணேசன் இறந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாதவரம் நீதித்துறை நடுவா் தீபாவுக்கு சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் பரிந்துரை செய்தாா். அதை ஏற்று நீதித்துறை நடுவா் தீபா விசாரணை செய்தாா்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொப்பை கணேசன் உடல் பிரேத பரிசோதனை, நீதித்துறை நடுவா் தீபா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் பின்னா் தொப்பை கணேசன் உடல் அவா் தந்தை ராஜியிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து தொப்பை கணேசனின் குடும்பத்தினா், சம்பவ இடத்தில் இருந்த போலீஸாா், மருத்துவா்கள், சாட்சிகள் ஆகியோரிடம் நீதித் துறை தீபா விசாரணை நடத்தினாா். விசாரணை முழுமையாக நிறைவடைந்ததும், நீதித் துறை நடுவா் தீபா சென்னை காவல் ஆணையரிடம் அறிக்கையை வழங்குவாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.