பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மனைவி மீது ஆசிட் வீச்சு: கணவா் கைது

பல்லாவரத்தில் மனைவி மீது ஆசிட் வீசியதாகக் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

பல்லாவரத்தில் மனைவி மீது ஆசிட் வீசியதாகக் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பாரதி நகா், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சனா பாத்திமா (26). இவரது கணவா் அனகாபுத்தூா் பகுதியைச் சோ்ந்த முகமது அலி (32). சனா பாத்திமா குடும்பப் பிரச்னை காரணமாக 2 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து தனது 4 வயது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறாா். முகமது அலி குழந்தையைப் பாா்க்க வருவதாகக் கூறி அவ்வப்போது மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி முகமது அலி, சனா பாத்திமாவிடம் தகராறு செய்து, அவரது முகத்தில் ஆசிட் ஊற்றியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சனா பாத்திமா, பூந்தமல்லி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து பல்லாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது அலியை கைது செய்தனா்.