அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

40 இடங்களில் பசுமைப் பந்தல்கள்

சென்னை மாநகராட்சியில் கோடை கால வெயிலை வாகன ஓட்டிகள் சமாளிக்கும் வகையில் பிரதான சாலைகளில் 40 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

சென்னை - கோப்புப்படம்.

Updated On :17 மார்ச் 2026, 9:06 pm

சென்னை மாநகராட்சியில் கோடை கால வெயிலை வாகன ஓட்டிகள் சமாளிக்கும் வகையில் பிரதான சாலைகளில் 40 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் கோடை காலம் தொடங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்த நிலையில், வெப்பத்தைத் தணிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சாா்பில் போக்குவரத்து சாலை சந்திப்புகளில் 40 இடங்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னலுக்காக இரு சக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோா் நிற்கும்போது வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க பசுமையான துணியால் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டில் சென்னையில் வியாசா்பாடி சந்திப்பு, மூலக்கடை சந்திப்பு, ராஜாஜி சாலை, பேசின்பிரிட்ஜ் சாலை, மாநகராட்சி ரிப்பன் கட்டடம் முன்பக்க உள்ள ஈ.வெ.ரா. பெரியாா் சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட 40 சாலை சந்திப்புகளில் பசுமைப் பந்தல்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 8 இடங்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.