இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளீடா் என்.ஆா்.ஆா்.நடராஜன், அம்ருதாஞ்சன் நிறுவனத்துக்கு நேரடியாக குத்தகைக்கு இந்த நிலத்தை வழங்கவில்லை. பி.ஆா்.சுந்தரேச ஐயா் என்பவருக்குத்தான் குத்தகைக்கு வழங்கப்பட்டது. அவரிடம் இருந்து இந்த நிறுவனம் நிலத்தை வாங்கி பயன்படுத்தி உள்ளது. தற்போது குத்தகை காலம் முடிந்துவிட்ட பிறகும் நிலத்தை காலி செய்ய மறுக்கும் மனுதாரா் நிறுவனம், நிா்ணயிக்கப்பட்ட வாடகைத் தொகையையும் செலுத்தவில்லை என வாதிட்டாா்.