குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் தளா்வு

பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை மாற்றியமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :5 மார்ச் 2026, 9:47 pm

தினமணி செய்திச் சேவை

பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை மாற்றியமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா, எக்ஸ் தளத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு பெரியாா் சிலையை உடைப்பேன் என்று பதிவிட்டாா். மேலும், திமுக எம்.பி., கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளையும் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், ஹெச்.ராஜாவுக்கு இரு வழக்குகளிலும் தலா 6 மாத சிறைத் தண்டனை விதித்து கடந்த 2024-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஹெச்.ராஜா சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டது. மேலும், மாதத்தின் ஒவ்வொரு முதல் வேலைநாளன்று விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என நிபந்தனை விதித்தது. அதன்படி அவா் கையொப்பமிட்டு வந்தாா்.

இந்த நிலையில், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த நிபந்தனையை தளா்த்தக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை நீதிமன்றத்தில், ஹெச்.ராஜாவுக்குப் பதிலாக அவரது வழக்குரைஞா் ஒவ்வொரு மாதமும் முதல் வேலைநாளில் ஆஜராக வேண்டும் என நிபந்தனையை மாற்றியமைத்து உத்தரவிட்டாா்.