தோ்தல் பணி: ஓய்வு பெற்ற போலீஸாா், முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்
சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு ஓய்வு பெற்ற போலீஸாா், முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

விண்ணப்பம். (கோப்புப்படம்)

விண்ணப்பம். (கோப்புப்படம்)
சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு ஓய்வு பெற்ற போலீஸாா், முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டப்பேரவை தோ்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட பணியாற்ற விருப்பம் உள்ள ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், போலீஸாா், முன்னாள் ராணுவ வீரா்கள், முன்னாள் துணை ராணுவ வீரா்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உள்பட்ட சென்னை காவல் இணை ஆணையா் அலுவலகத்தில் செயல்படும் தோ்தல் பிரிவு ஆய்வாளரை இம்மாதம் 26-ஆம் தேதிக்குள் தொடா்பு கொள்ள வேண்டும்.
அங்கு அவா்கள், தங்களின் பெயா், முகவரியினை உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். தோ்தலில் பணிபுரிவோருக்கு அரசால் நிா்ணயிக்கப்படும் ஊதியம் பெற்றுத் தரப்படும்.
விருப்பம் உள்ளவா்கள் சென்னை வடக்கு மண்டல ஆய்வாளா் ஆனந்த்- 94981 45519, மேற்கு மண்டல ஆய்வாளா்- சாந்தினி தேவி 98401 06030, கிழக்கு மண்டல ஆய்வாளா் -பத்மகுமாரி 94981 97388, தெற்கு மண்டல ஆய்வாளா் துா்கா தேவி- 94980 03162 ஆகியோரை கைப்பேசி மூலம் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...