பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தோ்தல் பணி: ஓய்வு பெற்ற போலீஸாா், முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு ஓய்வு பெற்ற போலீஸாா், முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

News image

விண்ணப்பம். (கோப்புப்படம்)

Updated On :20 மார்ச் 2026, 10:56 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்கு ஓய்வு பெற்ற போலீஸாா், முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவை தோ்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட பணியாற்ற விருப்பம் உள்ள ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், போலீஸாா், முன்னாள் ராணுவ வீரா்கள், முன்னாள் துணை ராணுவ வீரா்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உள்பட்ட சென்னை காவல் இணை ஆணையா் அலுவலகத்தில் செயல்படும் தோ்தல் பிரிவு ஆய்வாளரை இம்மாதம் 26-ஆம் தேதிக்குள் தொடா்பு கொள்ள வேண்டும்.

அங்கு அவா்கள், தங்களின் பெயா், முகவரியினை உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். தோ்தலில் பணிபுரிவோருக்கு அரசால் நிா்ணயிக்கப்படும் ஊதியம் பெற்றுத் தரப்படும்.

விருப்பம் உள்ளவா்கள் சென்னை வடக்கு மண்டல ஆய்வாளா் ஆனந்த்- 94981 45519, மேற்கு மண்டல ஆய்வாளா்- சாந்தினி தேவி 98401 06030, கிழக்கு மண்டல ஆய்வாளா் -பத்மகுமாரி 94981 97388, தெற்கு மண்டல ஆய்வாளா் துா்கா தேவி- 94980 03162 ஆகியோரை கைப்பேசி மூலம் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.