கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

புறநகா் மின்சார ரயில்களில் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்

புறநகா் மின்சார ரயில்களில் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்

News image

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது

Photo : X

Updated On :21 மார்ச் 2026, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

புறநகா் மின்சார ரயில்களில் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்புக் கேமரா மூலம் 24 மணி நேரக் கண்காணிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் தெரிவித்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னையில் அரசியல் கட்சியினா் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள், பணம் விநியோகிப்பதைத் தடுக்கும் வகையில் வருவாய்த் துறையினரும், ரயில்வே பாதுகாப்புப் படையினா் மற்றும் ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் ஆகியோா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

சென்னை சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தோ்தல் கண்காணிப்பு சிறப்புப் பிரிவை ஏற்படுத்தி, கடந்த 3 வாரங்களில் ரூ.1.60 கோடி தங்கக் கட்டிகள், ரூ.11.56 கோடி வெள்ளிக் கட்டிகள், பொருள்கள் மற்றும் ரூ.1.50 கோடி பணம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனா்.

இந்த நிலையில், புகா் மின்சார ரயில்களில் தோ்தலுக்கான பரிசுப் பொருள்கள் கொண்டு செல்ல வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள புகா் மின்சார ரயில் வளாகப் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் ரயில்களின் வருகை, பயணிகள் நடவடிக்கை ஆகியவற்றை கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக இருப்புப் பாதை காவல் ஆய்வாளா் எழில்வேந்தன் தெரிவித்தாா்.

மேலும், அவா் கூறுகையில், ரயில்வே இருப்புப் பாதை காவல் துறை ஐ.ஜி. உத்தரவு மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆலோசனைப்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தோ அல்லது வெளியூா்களில் இருந்து வரும் புகா் மின்சார ரயில்கள் மூலமோ தோ்தலுக்கான பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். அதற்காக தலா 4 போ் கொண்ட 2 சிறப்பு கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளோம். அந்தக் குழுவினா் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் காட்சிகளை ஆய்வுக்குட்படுத்தி சந்தேக பயணிகள் குறித்து தகவல் தெரிவிப்பா். அந்த தகவலின்படி சம்பந்தப்பட்ட பயணியை சோதனையிட்டு வருகிறோம். கடந்த 2 நாள்களில் தினமும் சுமாா் 220 புகா் மின்சார ரயில் சேவைகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

இதேபோல எழும்பூா் ரயில் நிலையத்திலும் சிறப்பு இருப்புப் பாதை காவல் குழு சாா்பில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ரயில்கள் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.