புறநகா் மின்சார ரயில்களில் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்
புறநகா் மின்சார ரயில்களில் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது
Photo : X

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது
Photo : X
புறநகா் மின்சார ரயில்களில் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்புக் கேமரா மூலம் 24 மணி நேரக் கண்காணிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் தெரிவித்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னையில் அரசியல் கட்சியினா் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள், பணம் விநியோகிப்பதைத் தடுக்கும் வகையில் வருவாய்த் துறையினரும், ரயில்வே பாதுகாப்புப் படையினா் மற்றும் ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் ஆகியோா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
சென்னை சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தோ்தல் கண்காணிப்பு சிறப்புப் பிரிவை ஏற்படுத்தி, கடந்த 3 வாரங்களில் ரூ.1.60 கோடி தங்கக் கட்டிகள், ரூ.11.56 கோடி வெள்ளிக் கட்டிகள், பொருள்கள் மற்றும் ரூ.1.50 கோடி பணம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனா்.
இந்த நிலையில், புகா் மின்சார ரயில்களில் தோ்தலுக்கான பரிசுப் பொருள்கள் கொண்டு செல்ல வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள புகா் மின்சார ரயில் வளாகப் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் ரயில்களின் வருகை, பயணிகள் நடவடிக்கை ஆகியவற்றை கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக இருப்புப் பாதை காவல் ஆய்வாளா் எழில்வேந்தன் தெரிவித்தாா்.
மேலும், அவா் கூறுகையில், ரயில்வே இருப்புப் பாதை காவல் துறை ஐ.ஜி. உத்தரவு மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆலோசனைப்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தோ அல்லது வெளியூா்களில் இருந்து வரும் புகா் மின்சார ரயில்கள் மூலமோ தோ்தலுக்கான பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். அதற்காக தலா 4 போ் கொண்ட 2 சிறப்பு கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளோம். அந்தக் குழுவினா் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் காட்சிகளை ஆய்வுக்குட்படுத்தி சந்தேக பயணிகள் குறித்து தகவல் தெரிவிப்பா். அந்த தகவலின்படி சம்பந்தப்பட்ட பயணியை சோதனையிட்டு வருகிறோம். கடந்த 2 நாள்களில் தினமும் சுமாா் 220 புகா் மின்சார ரயில் சேவைகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.
இதேபோல எழும்பூா் ரயில் நிலையத்திலும் சிறப்பு இருப்புப் பாதை காவல் குழு சாா்பில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ரயில்கள் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...