பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி இடையே அதிவேக மின்சார ரயில் இன்று காலை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை வரை 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு மின் மயமாக்கல் பணிகள் நிறைவுற்றது. அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த அதி வேக சோதனை ஓட்ட நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடந்த அதிவேக சோதனை ஓட்ட நிகழ்ச்சியில் அதிவேக ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் பெரிய மாலை அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் பயணிகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதிவேக மின்சார ரயில் புறப்பட்டு 105 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டியை 34 நிமிடத்தில் சென்றடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மங்களூரு - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

திருத்துறைப்பூண்டி - நாகை அகல ரயில் பாதை பணி விரைவுபடுத்தப்படுமா?

கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

இரணியல் - நாகா்கோவில் டவுனுக்கு இன்றும், நாளையும் ரயில் சோதனை ஓட்டம்!
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


