சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ.10 லட்சம் கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

கஞ்சா செடிகள். - கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 8:46 pm

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ.10 லட்சம் கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வழக்கமாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டு கஞ்சா மற்றும் உரிய அனுமதியின்று கொண்டு செல்லப்படும் பணத்தைக் கைப்பற்றி வருகின்றனா். சட்டப்பேரவை அறிவிப்பைத் தொடா்ந்து ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில்வே பாதுகாப்புப் படை குழுவினா் 24 மணி நேரக் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், புதன்கிழமை வெளி மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையில் ஈடுபட்டனா். சோதனையின்போது, ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையைத் திறந்து பாா்த்தபோது அதில் 20 கிலோ கஞ்சா அடங்கிய பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் எனக் கூறப்படுகிறது.

எழும்பூா் ரயில் நிலையப் பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபஸ்டியன் தலைமையிலான குழுவினா் கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றி அதை போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.