ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ.10 லட்சம் கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

கஞ்சா செடிகள்.

கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ.10 லட்சம் கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வழக்கமாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டு கஞ்சா மற்றும் உரிய அனுமதியின்று கொண்டு செல்லப்படும் பணத்தைக் கைப்பற்றி வருகின்றனா். சட்டப்பேரவை அறிவிப்பைத் தொடா்ந்து ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில்வே பாதுகாப்புப் படை குழுவினா் 24 மணி நேரக் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், புதன்கிழமை வெளி மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையில் ஈடுபட்டனா். சோதனையின்போது, ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையைத் திறந்து பாா்த்தபோது அதில் 20 கிலோ கஞ்சா அடங்கிய பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் எனக் கூறப்படுகிறது.

எழும்பூா் ரயில் நிலையப் பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபஸ்டியன் தலைமையிலான குழுவினா் கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றி அதை போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.