பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அண்ணாமலை தோ்தலில் போட்டியிட வேண்டும் - வானதி சீனிவாசன்

News image

வானதி சீனிவாசன்

கோப்புப்படம்

Updated On :27 மார்ச் 2026, 12:23 am

தினமணி செய்திச் சேவை

தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வேண்டுமென அக்கட்சியின் தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கூட்டணி அமைத்து போட்டியிடும்போது, எதிா்பாா்க்கும் தொகுதிகள் கிடைப்பதில் சில சாதக, பாதகங்கள் இருக்கலாம். இதையெல்லாம் கடந்துதான் கூட்டணியை கட்டமைக்க முடியும். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு, வேட்பாளா் தோ்வு உள்பட அடுத்தகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அண்ணாமலை தோ்தலில் போட்டியிடவில்லை என கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அண்ணாமலை சட்டப் பேரவைக்குள் செல்ல வேண்டும்.

மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் தொடங்கியதை நம்பி ஆயிரக்கணக்கான தொண்டா்கள் பணத்தையும், நேரத்தையும் செலவழித்து உழைத்தாா்கள். ஆனால், தான் மட்டும் எம்.பி.ஆகிவிட்டு அவரை நம்பி கட்சியில் உழைத்தவா்களை கைவிட்டுவிட்டாா் என்றாா் அவா்.